திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உலக பிரசித்திபெற்ற முத்துப்பேட்டை தர்காவில் நடைபெற்ற 720 ஆம் ஆண்டு கந்தூரி விழாவில் சுமார் 1,000- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். முத்துப்பேட்டையில் உலக பிரசித்திபெற்ற ஜாம்புவானோடை தர்கா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டரவரின் 720- வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தர்காவிலிருந்து, மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையங்கள், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்காவை அடைந்தது.