காஷ்மீர்: காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட் பகுதியில் நடந்த துப்பாக்கிச சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படை வீரர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படை வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர்.