பாட்னா: பீகார் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவரின் மகன் தனது ஆதரவாளர்களுடன் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பீகார் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சதானந்த் சிங். இவரது மகன் சுபானந்த் முகேஷ். கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கஹால்கோனில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது தந்தை 8 முறை அங்கு வெற்றி பெற்று வரலாறு படைத்தவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சதானந்த் சிங் உயிரிழந்தார்.