திருவெறும்பூர் நேதாஜி நகரில் சேறும், சகதியுமான தெரு சாலையில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்

திருவெறும்பூர் : திருவெறும்பூர் நேதாஜி நகர் பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாநகராட்சி 65வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் நேதாஜி நகர் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்தப் பகுதிக்கு அடிப்படைத் தேவைகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் சரிவர ஏற்படுத்தி தரவில்லை.

மேலும் இந்த பகுதியில் உள்ள பொது கழிப்பிட பராமரிப்பு இல்லாமல் பால்வாடி நிலையத்திற்கு அருகே உள்ளதால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பால்வாடி கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என மக்கள் குற்றம் சாட்டினர். எனவே உடனடியாக இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க கோரியும் இதுவரை எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில், தற்போது சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால் நேதாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: