திருச்செங்கோடு அருகே வேனில் கடத்தி வரப்பட்ட 270 கிலோ குட்கா பறிமுதல்-4 பேர் அதிரடி கைது

திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே வேனில் கடத்திய 270 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். திருச்செங்கோடு புறநகர் போலீசார், ஈரோடு சாலையில் உள்ள தொட்டி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஈரோட்டில் இருந்து சரக்கு ஏற்றிவந்த வேனை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேனில் 8 மூட்டைகளில் 270 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து வேனுடன் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், வண்டியில் வந்த குமாரபாளையத்தை சேர்ந்த தினேஷ்(22), சுரேஷ்(23), பழனிச்சாமி(29), மோகன்ராஜ்(28) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி செளமியா மேத்யூ, அவர்களை 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: