திருச்செங்கோடு : திருச்செங்கோடு அருகே வேனில் கடத்திய 270 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். திருச்செங்கோடு புறநகர் போலீசார், ஈரோடு சாலையில் உள்ள தொட்டி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஈரோட்டில் இருந்து சரக்கு ஏற்றிவந்த வேனை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வேனில் 8 மூட்டைகளில் 270 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.