அமமுகவினர் மீது அதிமுக வீண்பழி: டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:மெரினா கடற்கரை சம்பவம் குறித்து அமமுக சார்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் முறையான விசாரணை இன்றி கட்சி நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதிமுகவில் நடக்கும் அதிகார மோதல், சொந்தக்கட்சி தொண்டர்களையே குண்டர்களை வைத்து தாக்கும் நிலைக்குச் சென்றிருப்பதை நாடறியும். அதையெல்லாம் மறைக்க அமமுக தொண்டர்கள் மீது வீண்பழி சுமத்தி தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

Related Stories: