நாளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்: மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் எனது தலைமையில் நாளை (11 ஆம் தேதி) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பெருவாயல் கிராமத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, க.சுந்தரம், இ.ஏ.பி.சிவாஜி, சி.எச்.சேகர், ஜெ.மூர்த்தி, டி.வி.தமிழன் இளங்கோவன், மு.பகலவன், கேவிஜி.உமாமகேஸ்வரி, மு.கதிரவன், டாக்டர் பரிமளம், ஏ.நிலவழகன், மீ.வீ.கோதண்டன், எம்.எல்.ரவி, ப.வெங்கடாஜலபதி, வெ.அன்புவாணன், கே.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் கே.சுப்பிரமணி, பா.செ.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, அபிராமி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

எனவே வருகின்ற 14ஆம் தேதி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதால் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: