சென்னை: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த சசிகலா, அங்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.