அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தெற்குத் தெரு பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திற்கு புதியகட்டிடம் ரூ.8 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் பிச்சைப்பாண்டி வரவேற்றார். புதிய கட்டிடத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.