கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,557 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41,439- ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 58,817 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 7.74 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5,108 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 43,771 ஆக உள்ளது.

Related Stories: