காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் இருந்து டிசிஎஸ் நிறுவன பணிக்குத் தேர்வான மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் மணி தலைமை தாங்கினார். கல்லூரி முதன்மை நிர்வாக அலுவலர் விஜயராஜ், முதல்வர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ஜானகிராமன் வரவேற்றார். தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து டிசிஎஸ் நிறுவனத்துக்கு தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.