கொழும்பு:இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கப்பல் முனையத்தை விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தை சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு வழங்கியது. இதற்காக, இந்தியா, ஜப்பான் உடனான ஆழ்கடல் கப்பல் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது. அதே போல, யாழ்ப்பாண கடலோரத்தில் உள்ள டெல்ப்ட், நாகதீபா, அனல்தீவு ஆகிய 3 தீவுகளில் புதிய மின் உற்பத்தி ஆலைகளை அமைக்க, சீனாவின் சினோ சோர் ஹைபிரிட் டெக்னாலஜி நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் இலங்கை அரசு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி அளித்தது.