அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பினையும் மீறி அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நதிநீர் உரிமைகள் பறிபோகும் வகையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டு வரும் நிலையில் இந்த மசோதா மாநிலங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அணைகளின் கட்டுப்பாடும் அவர்களின் கைகளில் சென்றுவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடமே குவிக்கும் இத்தகைய செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

Related Stories: