மதுரை: மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ரேஷன் கடை, வியாபார நிறுவனங்கள், திரையரங்கு, சூப்பர் மார்க்கெட், கடை வீதிகள், துணிக்கடைகள், வங்கிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்கள் 18 பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.