ஜெயலலிதா இல்ல சாவியை வாரிசுகளிடம் ஒப்படைக்க கூடாது - அதிமுக

சென்னை: ஜெயலலிதா இல்ல சாவியை வாரிசுகளிடம் ஒப்படைக்க கூடாது என்று அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வேதா நிலைய சாவியை வாரிசுகளிடம் ஒப்படைத்தால் கட்சிக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு அனுமதி கோரி அதிமுக மனு அளித்துள்ளது. மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: