இந்தியை திணிக்க முயன்றால் இந்தியா பல நாடுகளாக சிதறி விடும்: வைகோ எச்சரிக்கை

சென்னை:  நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பிரகாலாத் ஜோஷி, பியுஷ் கோயல் முன்னிலை வகித்தனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொண்டு பேசியதாவது: இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுவரை காணாத அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்த 750 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கள் உடைமைகளை அவர்கள் இழந்து இருக்கிறார்கள். காஷ்மீரில் இருநது கன்னியாகுமரி வரை மக்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளை ஆதரித்தனர். எனவே, இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெறும் என்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் உறுதி கூறினார்.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று, ஒரு சர்வாதிகார நாடு ஆக்கத் துணிந்து விட்டார். தமிழகத்தில் இந்தி எதிர்பபுப் போராட்டம் எரிமலையாக வெடித்தது. எனவே, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, மக்கள் விரும்புகின்றவரை,  இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என உறுதிமொழி கொடுத்தார். ஆனால், சில நாள்களுக்கு முன்னர்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவுக்கு ஒரே மொழி இந்திதான். உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள் முழுமையும் இப்போது இந்தியில்தான் எழுதுகிறோம் என்று கூறி இருக்கிறார். இந்த அக்கினிப் பரீட்சையில், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே ஒழிக்க முனைகின்ற இந்த அரசு, காணாமல் போய்விடும்.

Related Stories: