திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள புங்கனுர் இனியனூர் சாலையில் வெள்ளப்பெருக்கு

திருச்சி: திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள புங்கனுர் இனியனூர் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணப்பாறையில் பகுதியில் பெய்து வரும் கன மலையானது கல்லணைவாரி வழியாக புங்கணுர்  வாடிகால் பெருக்கெடுத்து தற்போது இந்த பகுதியில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது , இந்தப் பகுதியில் பொதுமக்கள் சாலைகளை கடந்து செல்ல  தடுப்பு ஏற்படுத்தி பிராட்டியூர் பகுதியிலிருந்து இனியனூர் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்தும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாநகர காவல்துறை சார்பில் மீட்புக் குழு தற்போது இந்த பகுதியில் தண்ணீர் செல்ல ஏதுவாக பணிகளை மேற்கொண்டு, தாழ்வான பகுதியில் தற்போது கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: