தஞ்சையில் இருந்து சென்னைக்கு 4500 டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு

தஞ்சை : தஞ்சையிலிருந்து சென்னைக்கு 4500 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் அனுப்பப்பட்டது.தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை அறுவடை கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் அரவைக்காக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தஞ்சையிலிருந்து சென்னைக்கு 21 ரயில் வேகன்களில் 3500 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நெல் அரிசியாக மாற்றப்பட்டு கொருக்குப்பேட்டை சேமிப்பு கிடங்கில் இருப்பில் வைக்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: