அண்ணாநகர்: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான்சன்(55). இவருடைய மகன் பெயர் ராபின்யோவான்(23). அதேப்பகுதியில் வசித்து வந்தவர் பெருமாள்(64). ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவர் சென்னை ஐ.சி.எப் தெற்கு ரயில்வே ஜாயிண்ட் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ராபின்யோவானின் தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கி தர ரூ.60,000 பணம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, தெற்கு ரயில்வே ஜாயிண்ட் ஆபிஸில் வேலை கிடைத்ததுபோல் ஒரு போலியான சான்றிதழை தயார் செய்து அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் அலுவலகத்தின் முன்வைத்து பெருமாள் கொடுத்துள்ளார்.