டெல்லி: நாட்டில் உரத்தட்டுப்பாடு எங்கும் கிடையாது. போதிய அளவிலான உரங்கள் இருப்பில் உள்ளது என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார். வேளாண்துறையில் உரத்தேவைகளை நிர்வகிப்பது மத்திய மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு என காணொளியில் நடைபெற்ற மாநில அமைச்சர்களுடனான கலந்துரையாடலில் ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். மண் பாதுகாப்பு, அதிக உற்பத்தித் திறன் கொண்ட உரங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.