ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் சாட்சியங்களை கலைத்தது, தடயங்களை அழித்தது தொடர்பாக கடந்த மாதம் 25ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது காவல் காலம் முடிந்த நிலையில் நேற்று மீண்டும் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர்.