புதுடெல்லி: எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானத்தை சுட்டு வீழ்த்தி வீர தீர செயல் புரிந்த இந்திய விமானப்படை கேப்டன் அபிநந்தன் வர்தமானுக்கு, வீர சக்ரா விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் பதன்கோட்டில் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி குண்டு வீசி தீவிரவாத முகாம்களை அழித்தன. அதைத் தொடர்ந்து, அடுத்த நாள் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி பறந்தன. உடனடியாக, இந்திய போர் விமானங்கள் சீறிப்பாய்ந்து, பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்தன. அப்போது நடந்த சண்டையில், தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டரான அபிநந்தன் வர்தமான், மிக்-21 விமானம் மூலமாக பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.