பெரம்பூர்: வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனி 4வது தெருவை சேர்ந்த வடமலை (32), நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் வழியாக சென்றபோது, அவ்வழியாக வந்த 2 பேர், இவரை வழிமறித்து, துப்பாக்கி முனையில், ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். மேலும், அவ்வழியாக வந்த மேலும் சிலரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, அந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.