மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45,000 கனஅடியில் இருந்து 55,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 55,000 கனஅடி காவிரி நீரும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கும் நிலையில் அணையின் நீர் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு 500 கனஅடியாக இருக்கிறது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 50,000 கனஅடியிலிருந்து 57,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: