திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்மனம் புதூர், கன்னியம்மா நகர், இருளர் காலனி மற்றும் கசவநல்லாத்தூர் இருளர் காலனி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 9 இருளர் இன மக்களுக்காக ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய பசுமை வீடுகள் கட்டப்பட்டன. இந்த பசுமை வீடுகள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி புதிய பசுமை வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் சாவிகளை ஒப்படைத்தார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் எம்.ராம்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.