திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தலைமை செயலாளராக ஜவகர் ரெட்டி நியமனம்

திருமலை: ஆந்திர மாநில சுகாதாரத்துறை செயலராக பணியாற்றி வந்த ஜவகர் ரெட்டியை, திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரியாக ஆந்திர அரசு நியமனம் செய்தது. இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தேவஸ்தான செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது ஜவகர் ரெட்டியை   ஆந்திர அரசு தலைமை செயலராக நியமித்து ஜெகன்மோகன் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தேவஸ்தான செயல் அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை இவர்  தொடர்ந்து செயல்படுவார்.

Related Stories: