திருப்பதி : அதி கனமழை எச்சரிக்கை காரணமாக திருப்பதி திருமலையில் அடுத்த 2 நாட்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்ள தடை விதித்து தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி திருப்பதிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.