திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மன்ற கூடத்தில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ராம்குமார், க.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் க கே.திராவிடபக்தன், கேபிஎஸ்ஆர்.கார்த்திகேயன், மு.நரேஷ்குமார், எஸ்.ராணி, வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், டி.யாமினி, பி.பூங்கோதை, பா தரணி, வி.கோவிந்தம்மாள், எஸ்.பிரசாந்த், சி.தயாளன், பா.சுபப்பிரியா, பா.சுமதி, மு.நீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விபத்தில் பலியான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டீஸ்வரனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.