ஆவடி: ஆவடி அருகே ஆயில்சேரி பகுதியில் லிப்ட் கேட்பதுபோல் நடித்து வாலிபரிடம் பைக், மோதிரத்தை பறித்த கும்பல், கூகுள் பே மூலம் 12 ஆயிரத்தை கையாடல் செய்துவிட்டு தப்பினர். சென்னை குன்றத்தூர், எருமையூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (24). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று மாலை அவர், நண்பரை பார்ப்பதற்காக பூந்தமல்லிக்கு பைக்கில் கிளம்பினார். இவர், ஆவடி அருகே ஆயில்சேரி பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு வாலிபர், லிப்ட் கேட்டு அஜித்குமார் பைக்கில் ஏறியுள்ளார். பின்னர் அவருடன் அங்கிருந்து கொஞ்சதூரம் சென்றதும் மேலும் 2 பேர், பைக்கை மறித்து நிறுத்தியுள்ளனர்.