மதுரை: இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் என்பவரது மனைவி பிருந்தா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் இடித்ததால் தன் கணவர் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்ததாக சொல்லப்படுவதாகவும் ஆனால் இந்த மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதால் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.