கோவை: கோவை இருகூரை சேர்ந்த சரளாதேவி மற்றும் கோதை நாச்சியார் ஆகிய இருவரும் சேர்ந்து ‘சர்வ லட்சுமி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கினர். இவர்கள் பெண்களுக்கு சுயதொழில் பெற்றுத்தருவதாக யூடியூப் சேனல் மூலம் விளம்பரம் செய்தனர். சுயதொழில் பெற்றுத்தர கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். இதனை நம்பி கோவை, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணத்தை ஆன்லைன் மூலமாக அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு அனுப்பினர்.