கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளை செய்து தராத அதிகாரிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக கடிந்துகொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கலிங்கராஜபுரம் பகுதியில் உள்ள முகாமில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.