கவுகாத்தி: அசாமில் மாநிலத்தில் செயல்பட்டு வரும் உல்பா தீவிரவாத அமைப்பு, மேலும் மூன்று மாதங்களுக்கு போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் ‘தனிநாடு’ கோரிக்கையுடன் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ‘உல்பா’ அமைப்பும் முக்கியமானது. ஒன்றிய அரசு இதனை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு உல்பா அமைப்பு 3 மாத போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னர், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இது மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.