சுதந்திரம் குறித்து நடிகை சர்ச்சை கருத்து; பாலிவுட்டில் பிச்சை எடுத்த கங்கனா: மும்பை பெண் மேயர் காட்டம்

மும்பை: சுதந்திரம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய கங்கனாவிற்கு, மும்பை பெண் மேயர் கிஷோரி பெட்னேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா கடந்த சில நாட்களுக்கு முன் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. பல மாநிலங்களில் கங்கனாவுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பெண் மேயர் கிஷோரி பெட்னேகர், இவ்விவகாரம் குறித்து கூறுகையில், ‘மும்பையில் (பாலிவுட்) பிச்சை எடுப்பதற்காக இங்கு கங்கனா வந்தார். அவருக்கு தேவையான பிச்சை இங்கு கிடைத்தது. மற்றவர்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார்? சுதந்திரம் குறித்து கங்கனா கூறிய கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

உண்மையில், அவர் மன்னிப்பு கேட்பதற்கு கூட தகுதியற்றவர். பொய்களின் ராணியாக உலா வந்து கொண்டிருக்கிறார். அவரது கருத்துகள் எடுபடாது’ என்றார். அதேபோல் மகாராஷ்டிரா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் வெளியிட்ட பதிவில், ‘வரலாறு என்பது மிக முக்கியமான பாடம்; மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கட்டாயம் அந்த பாடத்தை நன்றாக படிக்க வேண்டும். வரலாறு பற்றிய அறிவு இல்லாததால் சிலர் தர்மசங்கடமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் சரியாக படிக்காததால் தவறான புரிதல்களை கொண்டுள்ளனர்’ எனக்கூறி அந்த பதிவில் கங்கனா அளித்த பேட்டியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Related Stories: