சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: கோவையில் தனியார் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.