தமிழகம் நாவலூரில் 102 வயது மூதாட்டி மரணம்: கிராம மக்கள் அஞ்சலி Nov 13, 2021 திருப்போரூர்: நாவலூரில் 102 வயது வரை மருத்துவமனைக்கு செல்லாமல் ஆரோக்கியத்துடன் இருந்து வந்த மூதாட்டி வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சென்னை புறநகர் பகுதியான நாவலூர் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள் (102). இவரது கணவர் சென்னியப்பன் பல ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 60க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் உள்ளனர்.நாவலூரில் உள்ள மகன் முத்து வீட்டில் வசித்து வந்தார். 102 வயதான கன்னியம்மாள் இதுவரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை. ஆரோக்கியத்துடன் இருந்து வந்த கன்னியம்மாள், வயது முதிர்வு காரணமாக நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். கன்னியம்மாளின் உடலுக்கு நாவலூர் கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை