நாவலூரில் 102 வயது மூதாட்டி மரணம்: கிராம மக்கள் அஞ்சலி

திருப்போரூர்: நாவலூரில் 102 வயது வரை மருத்துவமனைக்கு செல்லாமல் ஆரோக்கியத்துடன் இருந்து வந்த மூதாட்டி வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவரது உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சென்னை புறநகர் பகுதியான நாவலூர் பகுதியை சேர்ந்தவர் கன்னியம்மாள் (102). இவரது கணவர் சென்னியப்பன் பல ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 60க்கும் மேற்பட்ட பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள் உள்ளனர்.

நாவலூரில் உள்ள மகன் முத்து வீட்டில் வசித்து வந்தார். 102 வயதான கன்னியம்மாள் இதுவரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதில்லை. ஆரோக்கியத்துடன் இருந்து வந்த கன்னியம்மாள், வயது முதிர்வு காரணமாக நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். கன்னியம்மாளின் உடலுக்கு நாவலூர் கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: