சென்னை: வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று பால் விநியோகம் செய்ய குழு அமைக்க வேண்டும். மேலும் 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர்ப்பு மையம் அமைக்கப்பட்டு அதன் எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பால் கொள்முதல் மற்றும் பால் விநியோகம் குறித்து மாவட்ட ஒன்றியத்தின் பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்களுடன் காணொளி காட்சி மூலம் நேற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மேலாண்மை இயக்குநர் கந்தசாமி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.