ஜனாதிபதி தலைமையில் டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு

புதுடெல்லி: மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்கும் 51வது மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். மேலும், பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரும் பங்கேற்கின்றனர். ஆளுநர்கள் மாநாடு பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஒன்றாகும். நாட்டின் முதல் ஆளுநர்கள் மாநாடு கடந்த 1949ம் ஆண்டு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இன்று நடைபெறுவது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடக்கும் 4வது மாநாடாகும். இதில், நாட்டின் பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Related Stories: