லண்டன்: கோவாக்சின் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், வரும் 22ம் தேதி முதல் இங்கிலாந்து வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்நாடு அறிவித்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான கோவாக்சின், இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. இதன் அவசர கால பயன்பாட்டுக்கு சமீபத்தில் உலக சுகாதார அமைப்பும் ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பட்டியலில் கோவாக்சினும் சேர்க்கப்படும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனகா தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கடந்த மாதம்தான் இந்நாடு அனுமதி அளித்தது.