பெய்ஜிங்: சீனாவின் அதிபர் ஜின் பிங் 3-வது முறையாக பதவியில் தொடர ஒப்புதல் அளிப்பதற்காக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். கட்சியின் 100 ஆண்டு போராட்டத்தில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் சாதனைகள் குறித்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.