கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,206 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் தடுப்பணையின் இருபுறத்திலும் கட்டப்பட்ட சிமெண்ட் கட்டைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.