மும்பை: மும்பை அருகே கடலில் கடந்த மாதம் 2ம் தேதி சொகுசு கப்பலில் தேசிய போதை பொருள் தடுப்பு துறையின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான குழு நடத்திய அதிரடி சோதனையில் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் 30ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க வான்கடே ரூ.25 கோடி கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இவர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்தும், மதத்தை மறைத்தும் பணியில் சேர்ந்ததாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவால் மாலிக் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.