ஜெனிவா: ஐரோப்பாவில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா பாதிப்பால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகையே உலுக்கிய கொரோனா தொற்று குறித்த அச்சம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சற்றே குறைந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான இயக்குனர் ஹன்ஸ்லக், தற்போதைய நிலையே தொடர்ந்தால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் மேலும் 5 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்க கூடும் என எச்சரித்துள்ளார்.