மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிக்கரையில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டது. மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி சார்பில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள விவசாய பாசன ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தலைமை வகித்தார். பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு ஏரிக்கரையின் முக்கிய பகுதிகளிலும் மரங்கள் இன்றி காணப்பட்ட கரை பகுதிகளிலும் 2 ஆயிரம் பனை மரக்கன்றுகளை நட்டனர்.