சென்னை: பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப் 1 பிரிவில் தமிழக அரசு பணி வழங்கி உள்ளது. அரசு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு மாரியப்பன் தங்கவேல் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு பாராஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பதக்கம் வென்றார். 2016ஆம் ஆண்டு தங்கப்பதக்கம் வென்றார். தற்போது நடந்து முடிந்த டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றிருந்தார். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
பாராஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
