புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக 2020 பிப்ரவரியில் வன்முறை வெடித்தது. இதில், 53 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ‘சமூக ஊடகங்களில் பரவிய தவறான வதந்திகள்தான் வன்முறைக்கு காரணம்,’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, ‘டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட அமைதி மற்றும் நல்லிணக்க குழுவை உருவாக்கி, சமூக ஊடகங்களை அழைத்து, தவறான செய்திகள் பரவாமல் தடுப்பதில் சமூக ஊடகங்களின் பங்கு மற்றும் பொறுப்பை உணர்த்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.