விளாத்திகுளத்தில் ராணுவ வீரர் உடல் தகனம்

விளாத்திகுளம்:  தூத்துக்குடி மாவட்டம், கீழ விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (46). இவரது மனைவி கோமதி. இரு மகள்கள் உள்ளனர். பஞ்சாப் பட்டியாலாவில் ராணுவப் பிரிவில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்த ரவிக்குமாருக்கு, ராணுவப் பணியில் சேர்ந்து கடந்த அக்டோபர் 31ம் தேதியுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையொட்டி அவருக்கு கடந்த 29ம் தேதி பிரிவு உபசார விழா நடந்தது. அப்போது திடீரென மயங்கி விழுந்து ரவிக்குமார் உயிரிழந்தார். இதையடுத்து ரவிக்குமாரின் உடல் கீழ விளாத்திகுளம் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு கொண்டுவரப்பட்டு, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Related Stories: