புதுடெல்லி: கொரோனா பரவல் குறைந்திருப்பதைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளன. 2 டோஸ் தடுப்பூசி போட்ட வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நடைமுறை வரும் 8ம் தேதி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் 8ம் தேதி நடைமுறைக்கு வரும் புதிய பயண கட்டுப்பாடு கொள்கையின்படி, விசா வைத்திருக்கும் 30 லட்சம் இந்தியர்கள், 2 டோஸ் தடுப்பூசி ஆவணத்துடன் அமெரிக்கா வர தகுதியானவர்கள் ஆவர்.