பொன்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை அருகே கீரைசாத்து பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் சுமார் 5000 மூட்டைகளை கொள்முதல் செய்தது. இதுதவிர, விவசாயிகள் கொண்டு வந்த 1000 மூட்டைகளை வாங்கி வெளியில் வைத்து விட்டனர். இதற்கு பணம் தராமல் புறக்கணித்ததாக தெரிகிறது. இதுமட்டுமின்றி கூடுதலாக 800 கொள்முதல் செய்து அரசு பைகளில் வைத்தனர். இதற்கும் பணம் தரவில்லை. இதுேபான்று, கடந்த 3 மாதங்களாக நெல் மூட்டைகள் மழையிலும் வெயிலிலும் நனைந்து மீண்டும் முளைத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.