ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வனப்பகுதிகளில் பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக வன சரகர் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனவர் ராஜசேகர், வனக்காப்பாளர்கள் முத்துக்குமார், கார்த்திக் ராஜா செல்வராகவன் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 பேர் கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சித்தார் கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முஹமது இஸ்மாயில்(40), அப்துல் சத்தார்(35), புஹாரி அஸ்மத் அலி(31) ஆகியோர் எனவும், பறவையினங்களை இறைச்சிக்காக வேட்டையாடியது தெரிந்தது.